இடுகைகள்

Online class-னா சும்மாவா? - நகைச்சுவை சிறுகதை

படம்
வணக்கம் நண்பர்களே! ' Tamil Stories 4 Everyone ' -க்கு உங்களை வரவேற்கிறேன்!! கொரோனா (Corona) நேரத்துலே வீட்டிற்குள்ளே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அதில் குறிப்பிட தக்க சம்பவம் 'ஆன்லைன் கிளாஸ் (Online Class)' என்ற பெயரில் நடக்கும் கலவரம்.  ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வேளையில், எப்பொழுது அறைக்குள் போகலாம்? எப்பொழுது போகக் கூடாது? எப்பொழுது பேச அனுமதி உண்டு? எப்பொழுது இல்லை? என்று தெரியாமல் அல்லாடும் பெரியவர்கள். ஆன்லைன் பாடமா? தூக்கமா? என கிளாஸ்-க்கு இடையில் அல்லாடும் சிறியவர்கள். நம் இல்லங்களில் நடைப்பெறுவது போன்ற சம்பவம் ஒன்று, இந்தக் கதையில் 'ஒரு அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடைபெறுகிறது. அப்படி என்ன சம்பவம்?   அம்மா : டேய் பாண்டியா! கொஞ்சம் பக்கத்து கடையிலிரு ந்து மிளகாய்த்தூள் வாங்கிட்டு வாடா...   பாண்டி :   இந்தக்  கொரோனா காரணமா   வீட்டுல இருக்க   சொன்னதும் சொன்னாங்க, அடிக்கடி வேலை விடுறாங்க. இந்தப் பக்கத்துக்  கடை  வேற  தி றந்துட்டாங்க...   எனக்குக் காலேஜ் (College)  திறந்ததும் ...

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

படம்
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை   உங்களுக்காகக் காத்திருக்கிறது ! மழையில் மாட்டிக் கொண்ட பல்லவி : அடைமழை பொழிந்து கொண்டிருந்தது. இரவு 1௦ பத்து ஆகிவிட்டது. 'அடிக்கும் மழையில், இனி யார் உணவகத்திற்கு வரப்போகிறார்கள்? கடையைச் சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் , நான் பூட்டி கொள்கிறேன்' என்று வேலையாட்களிடம் கூறினாள் பல்லவி. வேலையாட்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு, 'சென்று வருகிறோம் அம்மா' என்றபடி வீட்டை நோக்கி நடந்தனர். பல்லவியும் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு கடையை மூடத் தயாராகினாள். கல்லாப் பெட்டியைத் திறந்து அன்று வசூலான ரூபாயை அடுக்கினாள் பல்லவி. மின்னல் வெளிச்சம் வானத்தைப் பிளந்தது, சட்டெனப் பல்லவி முன் ஒரு நிழல் தெரிந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தால் பல்லவி. ஜன்னல் பக்கம் யாரும் இல்லை. 'ஆனால், மின்னலின் வெளிச்சம் படும்பொழுது யாரோ இங்கு இருப்பது போல் தோன்றியதே?' என்றபடி மீண்டும் ரூபாயை எண்ண தொடங்கினாள். எனினும், பயம் அவள் மனதை ஆட்கொண்டது. 'ஏதாவது ஒரு வழிப்போக்கராக இருப்பார்' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். கத...

செல்போன் அழைப்பு | நகைச்சுவை சிறுகதை

படம்
சிலர் ஒன்றாகக் கூடி கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேர மகிழ்ச்சியான விளையாட்டிற்கு பின், வியர்த்து விறுவிறுத்து பசியோடு அங்கிருந்த உணவகத்தில் கூடினர். சட்டென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. மேஜை மீது இருந்த அந்தச் செல்போனின் பச்சை பொத்தானை அழுத்தினார் ஒருவர். உணவு உண்டு கொண்டிருந்ததால் அவர் கைப்பேசியின் லவுட் ஸ்பீக்கர் பொத்தனை அழுத்திப் பேசத்தொடங்கினார். மனைவி : ஹலோ! என்னங்க நான் என் தோழியோடு மால்-க்கு போறேன்னு நேற்று உங்களிடம் சொன்னேன்ல. அங்கு வந்து விட்டோம். எனக்குப் பிடித்தவற்றை வாங்கி கொள்ளவா? அவர் : சரி மா! வாங்கிக்கோ. மனைவி: என்னங்க, இங்கே ஒரு அழகிய ஆடை இருக்கு. பல நாட்களாக வாங்கித்தாங்கன்னு கேட்டேன்ல ஒரு மாடல், அது இங்கே இருக்கு. அதன் விலை 15,௦௦௦ ரூபாயாம்..... நிறம், அளவு எல்லாமே நான் எதிர்பார்த்தபடி இருக்கு வாங்கிக்கவா…? அவர் : வாங்கிக்கோ. [ஒரு ஆடைக்கு 15,௦௦௦ ரூபாயா என்று சுற்றி இருந்தவர்கள் திரு திருவென விழித்தார்] மனைவி : என்னங்க, இன்னொரு விஷயம்.... என் தோழி மாலா இருக்கால, அவள் என்னோடு கடைக்கு வந்த அவளுக்கும் ஒரு ஆடை எடுத்துத் தர வேணும் சொன்னா, நானும் வாங்கி ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story

கடத்த போறாங்க! | Kidnap Thriller Suspense Story | விறுவிறுப்பான தமிழ் சிறுகதை