Online class-னா சும்மாவா? - நகைச்சுவை சிறுகதை
வணக்கம் நண்பர்களே! ' Tamil Stories 4 Everyone ' -க்கு உங்களை வரவேற்கிறேன்!! கொரோனா (Corona) நேரத்துலே வீட்டிற்குள்ளே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அதில் குறிப்பிட தக்க சம்பவம் 'ஆன்லைன் கிளாஸ் (Online Class)' என்ற பெயரில் நடக்கும் கலவரம். ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வேளையில், எப்பொழுது அறைக்குள் போகலாம்? எப்பொழுது போகக் கூடாது? எப்பொழுது பேச அனுமதி உண்டு? எப்பொழுது இல்லை? என்று தெரியாமல் அல்லாடும் பெரியவர்கள். ஆன்லைன் பாடமா? தூக்கமா? என கிளாஸ்-க்கு இடையில் அல்லாடும் சிறியவர்கள். நம் இல்லங்களில் நடைப்பெறுவது போன்ற சம்பவம் ஒன்று, இந்தக் கதையில் 'ஒரு அம்மாவிற்கும் மகனுக்கும் இடையே நடைபெறுகிறது. அப்படி என்ன சம்பவம்? அம்மா : டேய் பாண்டியா! கொஞ்சம் பக்கத்து கடையிலிரு ந்து மிளகாய்த்தூள் வாங்கிட்டு வாடா... பாண்டி : இந்தக் கொரோனா காரணமா வீட்டுல இருக்க சொன்னதும் சொன்னாங்க, அடிக்கடி வேலை விடுறாங்க. இந்தப் பக்கத்துக் கடை வேற தி றந்துட்டாங்க... எனக்குக் காலேஜ் (College) திறந்ததும் ...